செய்திகள்
மீஞ்சூர் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி
மீஞ்சூர் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் கற்பக விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமார் (34). இவர் இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது வீட்டில் சுவிட்ச் போட்ட போது உடலில் மின்சாரம் பாய்ந்தது. தூக்கி வீசப்பட்ட அவரை அருகில் உள்ளவர்கள் மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்ததில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.