செய்திகள்
கைது

நெல்லை அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பஞ்சாயத்து ஊழியர் கைது

Published On 2021-11-19 09:06 GMT   |   Update On 2021-11-19 09:06 GMT
நெல்லை அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பஞ்சாயத்து ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கயத்தாறு:

கயத்தாரை அடுத்த பன்னீர்குளத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 41). இவர் பன்னீர்குளம் பஞ்சாயத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சீனிவாசன் அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அந்த மாணவி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் 8 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுதொடர்பாக அவரிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று சீனிவாசனை கைது செய்தனர். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

Tags:    

Similar News