செய்திகள்
வெள்ளகோவிலில் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி - தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
வெள்ளகோவில் திருவள்ளுவர் நகர் பகுதியில் சோழீஸ்வரர் ஆலயம் கோவிலுக்கு சொந்தமான சந்தை மதிப்பில் ரூ.10 கோடி மதிப்பிலான 0.79 ஹெக்டேர் காலியிடம் உள்ளது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் பகுதியில் உள்ள கோவில்களுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் பல்வேறு பகுதியில் உள்ளன. வெள்ளகோவில் திருவள்ளுவர் நகர் பகுதியில் சோழீஸ்வரர் ஆலயம் கோவிலுக்கு சொந்தமான சந்தை மதிப்பில் ரூ.10 கோடி மதிப்பிலான 0.79 ஹெக்டேர் காலியிடம் உள்ளது. இந்த காலி இடத்தின் ஒரு பகுதியை தனியார் ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டனர்.
இதை அறிந்த கோவில் செயல் அலுவலர் ராமநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டதை தடுத்து நிறுத்தி விட்டனர்.