செய்திகள்
வெள்ளகோவிலில் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
விழாவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள இலக்கமநாயகன்பட்டி ஊராட்சி ஆண்டிபாளையத்தில் உள்ள மகாகணபதி, பகவதிஅம்மன், மாகாளியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.