செய்திகள்
தாக்குதல்

எருமப்பட்டி அருகே வாலிபரை தாக்கியவர் கைது

Published On 2021-11-12 15:05 GMT   |   Update On 2021-11-12 15:05 GMT
எருமப்பட்டி அருகே வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருமப்பட்டி:

எருமப்பட்டி 5 ரோட்டை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 25). இவரை சம்பவத்தன்று அம்பேத்கர் நகரை சேர்ந்த நந்தகுமார், பிரவீன், சரத்குமார், அரவிந்த் ஆகியோர் வழிமறித்து தாக்கினர். இதுகுறித்து வேல்முருகன் எருமப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News