செய்திகள்
மாணவி சுவேதாவுக்கு வாழ்த்து தெரிவித்த கிராம மக்கள்.

நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு எம்.செட்டிபாளையம் கிராமமக்கள் வாழ்த்து

Published On 2021-11-12 07:04 GMT   |   Update On 2021-11-12 07:04 GMT
மாணவி சுவேதா நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 618 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தார்.
மங்கலம்:

மங்கலம் ஊராட்சி எம்.செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகம், மல்லீஸ்வரி ஆகியோரின் மகள் சுவேதா. இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு படித்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 12-ந் தேதி நீட்தேர்வு எழுதினார். தற்போது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மங்கலம் ஊராட்சி எம்.செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மாணவி சுவேதா நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 618 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு எம்.செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயம் என்.மகேந்திரகுமார், பண்ணையார் லோகநாதன், சரவணக்குமார், சுந்தரேசன், ராமசாமி, வெற்றிஅரவிந்த், ஸ்ரீதர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News