செய்திகள்
பத்ம விருது - விவசாய துறைக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டுகோள்
நம் நாட்டில் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் விவசாயம் சார்ந்த தொழிலில் உள்ளனர்.
திருப்பூர்:
‘பத்ம’ விருது வழங்குவதில் விவசாய துறைக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து திருப்பூரில் இந்திய விவசாயிகள் சங்க செயலாளர் நல்லசாமி கூறியதாவது:
நம் நாட்டில் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் விவசாயம் சார்ந்த தொழிலில் உள்ளனர். ஆனால் நாட்டின் உயரிய ‘பத்ம’ விருது அபூர்வமாக மட்டுமே விவசாயதுறை சார்ந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இது மிகவும் வருத்தமாக உள்ளது.’பத்ம’ விருதுகளில் 50 சதவீதம் விவசாய துறைக்கு வழங்கப்பட வேண்டும். இதற்காக அரசியல் கட்சியினர் குரல் கொடுக்க வேண்டும்.
இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு இந்த வேண்டுகோள் முன் வைக்கப்படுகிறது. விருதுக்கான தேர்வில் விவசாய துறையினருக்கு உரிய முன்னுரிமை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.