செய்திகள்
மின்சார நிறுத்தம்

முசிறி துணை மின்நிலைய பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2021-11-10 20:46 GMT   |   Update On 2021-11-10 20:46 GMT
முசிறி துணை மின்நிலைய பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
எலச்சிபாளையம்:

நாமக்கல் மின் பகிர்மான வட்டம், திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட முசிறி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, அக்கலாம்பட்டி, குப்பகவுண்டன் புதூர், குன்னங்கல்புதூர், கொட்டாம்பட்டி, நாய் கடிப்புதூர், சிலுவம்பட்டி, அத்தியம்பாளையம், புரசபாளையம், மாரப்ப நாயக்கன்பட்டி, முசிறி, பள்ளிப்பட்டி, இளையாபுரம், பல்புடுங்கிபாளையம் புதூர், வேப்பமரத்து புதூர், மணிக்கட்டி புதூர், கணக்கம்பாளையம், சிங்கிலிபட்டி, பொம்மம்பட்டி, தளிகை, நருவலூர், தொட்டிபாளையம், பாலக்காடு, பொய்யேரிபாளையம், சின்னதளிகை, தட்டரா பாளையம், கப்பநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திருச்செங்கோடு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பானுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News