செய்திகள்
தற்கொலை

கூத்தாநல்லூர் அருகே விவசாயி தற்கொலை

Published On 2021-11-09 13:40 GMT   |   Update On 2021-11-09 13:40 GMT
கூத்தாநல்லூர் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள சேந்தனாங்குடி கீழமணலி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 65). விவசாயி. இவருக்கும், இவரது உறவினர் குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டது. இதனால் பொன்னுசாமி மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று மனமுடைந்த அவர் எலிபேஸ்ட் (விஷம்) தின்று மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் பொன்னுசாமியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News