செய்திகள்
மரணம்

நன்னிலம் அருகே தந்தை-மகன் தகராறை தடுக்க முயன்ற மூதாட்டி பலி

Published On 2021-11-05 14:08 GMT   |   Update On 2021-11-05 14:08 GMT
நன்னிலம் அருகே தந்தை-மகன் தகராறை தடுக்க முயன்ற மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்னிலம்:

நன்னிலம் அடுத்துள்ள கீரனூர் வடக்கு தெருவை சேர்ந்த மோகன் (வயது 55). அவருக்கும், அவரது தந்தை தங்கராஜ் (93), இருவருக்கும் இடையே தகராறு தீபாவளி அன்று ஏற்பட்டுள்ளது. தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்ய, தம்கராஜ் மனைவி, தங்கைஅம்மாள் (90), முயன்றபோது தந்தைக்கும் மகனுக்கும், இடையே நடந்த தள்ளு முள்ளுவில், தடுமாறி கீழே விழுந்த, தங்கை அம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தங்கமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். மோகனை கைது செய்தனர்.

Tags:    

Similar News