செய்திகள்
சுவேதா

நீட் தேர்வில் திருப்பூர் மாணவி சாதனை

Published On 2021-11-03 08:40 GMT   |   Update On 2021-11-03 08:40 GMT
பிளஸ்-2 முடித்துவிட்டு டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு கடுமையாக படித்து வந்தார் சுவேதா.
மங்கலம்

பிளஸ்-2 முடித்துவிட்டு டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு கடுமையாக படித்து வந்தார் சுவேதா.

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் ஒன்றியம்எம்.செட்டிபாளையம் பகுதியைச்சேர்ந்தவர் சண்முகம்( வயது 55). இவரது மனைவி மல்லீஸ்வரி(45).இவரது மகள் சுவேதா(20). இவர் திருப்பூர் ரோட்டில் உள்ள லிட்டில் பிளவர் தனியார் பள்ளியில் நடந்த 2018-2019-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 முடித்துவிட்டு டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு கடுமையாக படித்து வந்தார்.இந்தநிலையில் கடந்த செப்டம்பர் 12-ந்தேதி நீட் தேர்வு எழுதினார். 

தற்போது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சுவேதா 720 மதிப்பெண்ணுக்கு 618 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தார்.மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் சுவேதா-வின் டாக்டர் கனவு நனவாகியுள்ளது.
Tags:    

Similar News