செய்திகள்
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை -அரசாணை வெளியீடு
தீபாவளிக்கு மறுநாளான 5-ந்தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் வருகிற 4-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள்.
இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாளான 5-ந்தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5-ந்தேதி அளிக்கப்படும் விடுமுறையை ஈடுசெய்ய வரும் 20-ந்தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5-ந்தேதி விடுமுறையால் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதனால் சந்தோசமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த விடுமுறையை அளித்துள்ளது.