செய்திகள்
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருப்பூர் கல்லம்பாளையத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2021-10-31 09:17 GMT   |   Update On 2021-10-31 09:17 GMT
சாக்கடை கால்வாய் சரியாக சீரமைக்கபடாமல் இருப்பதால் சாக்கடை கழிவுநீர் மற்றும் மழைநீர் வீடுகளில் புகுந்து விடுகின்றன.
திருப்பூர்:

திருப்பூர் கல்லம்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகளுக்காக அங்கு குழிகள் தோண்டப்பட்டது. இந்த குழிகள் சரியாக மூடப்படாமல் இருப்பதால் சாலையில் மழை நீர் தேங்குகிறது.

மேலும் சாக்கடை கால்வாய் சரியாக சீரமைக்கபடாமல் இருப்பதால் சாக்கடை கழிவுநீர் மற்றும் மழைநீர் வீடுகளில் புகுந்து விடுகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே குழியை மூட வேண்டும் மற்றும் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்தும் சாக்கடையை சுத்தம் செய்யக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள்  இன்று  சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்  அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Tags:    

Similar News