செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன்

அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்

Published On 2021-10-30 12:26 GMT   |   Update On 2021-10-30 12:26 GMT
வாக்குச்சாவடியில் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
சென்னை:

2005ம் சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலின்போது கே.கே.நகர் வாக்குச்சாவடியில் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். 10 ஆண்டுகளாக வழக்கில் முன்னேற்றம் இல்லை என்றும் அந்த மனுவில் குறிப்பட்டிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, மனுக்கள் மீது மனுக்களை தாக்கல் செய்து விசாரணையை தாமதப்படுத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News