செய்திகள்
திருட்டு

தஞ்சை அருகே பம்பு செட்டுகளில் ரூ.1 லட்சம் காப்பர் வயர்கள் திருட்டு

Published On 2021-10-27 22:52 GMT   |   Update On 2021-10-27 22:52 GMT
தஞ்சை அருகே பம்பு செட்டுகளில் ரூ.1 லட்சம் காப்பர் வயர்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:

தஞ்சை அருகே வேங்கராயன்குடிக்காடு பகுதியில் விவசாயிகள் பாஸ்கர், துளசிஅய்யா, பாண்டியன், ராமன், குமார் ஆகியோருக்கு சொந்தமான பம்பு செட்டுகளில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் நேற்று தனித்தனியாக வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News