செய்திகள்
மோதல்

ஆம்பூர் அருகே பொது இடத்தில் கேக் வெட்டியதால் கோஷ்டி மோதல்

Published On 2021-10-24 13:18 GMT   |   Update On 2021-10-24 13:18 GMT
ஆம்பூர் அருகே பொது இடத்தில் கேக் வெட்டியதால் கோஷ்டி மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே வீராங்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒருவரின் பிறந்தநாளை அவரது நண்பர்கள் பொது இடத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது அங்கிருந்த சிலர் இதனை தட்டி கேட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் அங்கு இருந்தவர்களை விரட்டியடித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் மோதல் ஏற்படாமல் தடுக்க சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News