செய்திகள்
அமைச்சர் தங்கம் தென்னரசு

சிமெண்ட் விலையை குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை -அமைச்சர் தங்கம் தென்னரசு

Published On 2021-10-23 12:35 GMT   |   Update On 2021-10-23 12:35 GMT
வலிமை என்ற பெயரில் புதிய சிமெண்ட் அறிமுகமானவுடன் மேலும் விலை குறையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சென்னை:

சிமெண்ட் விலையை குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 

“தமிழக அரசின் டான்செம் நிறுவனம் விரைவில் 'வலிமை' என்ற பெயரில் புதிய சிமெண்ட் அறிமுகப்படுத்த உள்ளது. முதற்கட்டமாக மாதந்தோறும் 30000 மெட்ரிக் டன் என்ற அளவில் வெளிச்சந்தையில்  விற்பனை செய்யப்பட உள்ளது. 

‘வலிமை’ சிமெண்ட் அறிமுகமானவுடன் மேலும் விலை குறையும். சிமெண்ட் விலை 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது”, என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
Tags:    

Similar News