செய்திகள்
போலீசார் விசாரணை

தஞ்சை அருகே கல்லூரி மாணவர் கடத்தல்?- போலீசார் விசாரணை

Published On 2021-10-22 11:30 GMT   |   Update On 2021-10-22 11:30 GMT
தஞ்சை அருகே கல்லூரி மாணவர் கடத்தப்பட்டதாக தாய் அளித்த புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:

தஞ்சை அருகே வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர் கணேசன்-முனீஸ்வரி தம்பதியின் மகன் ராஜா (வயது 17). இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற ராஜா மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பின்னர் முனீஸ்வரி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என பல இடங்களிலும் தேடிப்பார்த்தும் ராஜாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து வல்லம் போலீசில் முனீஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் ராஜாவை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு எதுவும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News