செய்திகள்
உடுமலையில் மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் பலாத்காரம் - வாலிபர் கைது
வீட்டிற்கு வந்த கிருஷ்ணவேணியின் பெற்றோர் மகளின் நிலைமையை பார்த்து கேட்டறிந்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை பார்த்தசாரதிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 27). மனவளர்ச்சி குன்றியவர். சம்பவத்தன்று இவரது பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த பால்பாண்டி (35) என்பவர் கிருஷ்ணவேணி வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டிற்கு வந்த கிருஷ்ணவேணியின் பெற்றோர் மகளின் நிலைமையை பார்த்து கேட்டறிந்த போது பால்பாண்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பால்பாண்டியை கைது செய்தனர்.