செய்திகள்
திருட்டு

சேலத்தில் ஆட்டோ திருட்டு

Published On 2021-10-16 15:45 GMT   |   Update On 2021-10-16 15:45 GMT
சேலத்தில் ஆட்டோ திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 13-ந் தேதி ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு ஆட்டோவை ஓட்டி வந்தார். பின்னர் பழைய பஸ் நிலைய வளாகத்தில் ஆட்டோவை நிறுத்தி விட்டு சென்றார். பூஜை பொருட்கள் வாங்கி விட்டு வந்து பார்த்த போது ஆட்டோ இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News