செய்திகள்
தங்கம் கடத்தல்

வெளிநாட்டில் இருந்து நூதன முறையில் ரூ.12½ லட்சம் தங்கம் கடத்தல்

Published On 2021-10-14 13:59 GMT   |   Update On 2021-10-14 13:59 GMT
வெளிநாட்டில் இருந்து நூதன முறையில் ரூ.12½ லட்சம் தங்கம் கடத்தி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னை சேர்ந்த பிரதீப் குமார் (வயது 24), ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (48) ஆகியோரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் சட்டையில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.12 லட்சத்து 42 ஆயிரம் ஆகும். இதைத்தொடர்ந்து இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News