செய்திகள்
பாலமேடு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
பாலமேடு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:
பாலமேடு அருகே சத்திரவெள்ளாளப்பட்டி - லக்கம்பட்டி செல்லும் சாலையில் சிவனடி அய்யன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு நேரத்தில் கோவில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்குள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பாலமேடு அருகே சத்திரவெள்ளாளப்பட்டி - லக்கம்பட்டி செல்லும் சாலையில் சிவனடி அய்யன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு நேரத்தில் கோவில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்குள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.