செய்திகள்
ரெயில் முன் பாய்ந்து எலக்ட்ரீசியன் தற்கொலை
ரெயில் முன் பாய்ந்து எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி:
சமயநல்லூர் அருகே பரவையை சேர்ந்தவர் வரதராஜன் இவரது மகன் ரமேஷ் (வயது 27) எலக்ட்ரீசியன். இவர் நேற்று திருச்சியில் இருந்து மதுரைக்கு சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்