செய்திகள்
பிடிபட்ட பாம்பு.

தாராபுரத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு

Published On 2021-10-07 09:04 GMT   |   Update On 2021-10-07 09:04 GMT
தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி 6 அடி நீள நாகப்பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ராஜவாய்க்கால் பாசன கால்வாயின் கிழக்கு கரை பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இதன் பின்புறம் விவசாய கூலி தொழிலாளர்கள் பலர் குடிசை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்.  

இந்தநிலையில் வளர்மதி என்பவரது வீட்டின் கூரையில் கடுமையான  விஷத்தன்மை உடைய நாகபாம்பு ஒன்று படம் எடுத்து சீறி நின்று கொண்டிருந்தது. 

இதனை பார்த்து அலறி அடித்து வீட்டை விட்டு வெளியே ஓடினார்.  உடனே இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஒரு மணி நேரம் போராடி 6 அடி நீள நாகப்பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். 
Tags:    

Similar News