செய்திகள்
திருச்செந்தூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேசிய காட்சி

அனைத்து நாட்களும் கோவில்களில் வழிபட அனுமதி கேட்டு திருச்செந்தூரில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-07 09:00 GMT   |   Update On 2021-10-07 09:00 GMT
கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என திருச்செந்தூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி:

தமிழகத்தில் உள்ள கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறி மாநிலம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் இன்று 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர் பால்ராஜ், மாநில மகளிர் அணி தலைவர் நெல்லையம்மாள், மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன், இந்து முன்னணி நெல்லை மண்டல செயலாளர் சக்திவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வேல் பூஜை நடத்தப்பட்டது. 

Tags:    

Similar News