செய்திகள்
கோப்புபடம்.

காங்கயத்தில் மனைவியை அழைக்க சென்ற வாலிபரின் மண்டை உடைப்பு

Published On 2021-10-07 07:58 GMT   |   Update On 2021-10-07 07:58 GMT
ரேணுகாவின் வீட்டிற்கு சென்ற சாமுவேல் ரேணுகாவின் தாய் தேவியிடம் தனது மனைவியை குடும்பம் நடத்த தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.
காங்கயம்:

வெள்ளகோவில் வேலம்பாளையம் சத்தியா நகர் பகுதியில் வசித்து வரும் சீரங்கன் என்பவரது மகன் சாமுவேல் (39. இவரும் காங்கயம் சத்யா நகரை சேர்ந்த மணி என்பவரின் மகள் ரேணுகாவும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் தற்போது வரை குழந்தை இல்லை.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரேணுகா சாமுவேலை பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்துக் கொண்டு கணவரிடம் விவாகரத்து கேட்டு காங்கேயம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ரேணுகாவின் வீட்டிற்கு சென்ற சாமுவேல் ரேணுகாவின் தாய் தேவியிடம் தனது மனைவியை குடும்பம் நடத்த தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த ரேணுகாவின் தம்பி லோகநாதன் சாமுவேலை கெட்டவார்த்தையால் திட்டி அருகில் கிடந்த தடியால் சாமுவேலை தலையில் அடித்தார். 

இதில் அவரது மண்டை உடைந்தது. தலையில் ரத்த காயத்துடன் காங்கயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு பின் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காங்கேயம் போலீசார் லோகநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். 
Tags:    

Similar News