செய்திகள்
10-ம்வகுப்பு மாணவர்களுக்காக பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு முகாம்
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர், மதிப்பெண் சான்று பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்.
திருப்பூர்:
10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மதிப்பெண் சான்று பெறும் பள்ளியிலேயே வேலை வாய்ப்பு பதிவு செய்யலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர், மதிப்பெண் சான்று பெறும் பள்ளியிலேயே வேலை வாய்ப்பு பதிவு செய்யலாம்.
ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மொபைல் போன், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் சென்று, பதிவு செய்யலாம்.வரும், 18-ந்தேதி வரை பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு முகாம் நடக்கும். http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்யலாம்.
சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து வந்து மதிப்பெண் சான்று பெறும் பள்ளியில் வேலை வாய்ப்பு பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.