செய்திகள்
கைது

சேந்தமங்கலம் அருகே விவசாயி வீட்டில் செல்போன் திருடிய லாரி டிரைவர் கைது

Published On 2021-10-06 18:28 GMT   |   Update On 2021-10-06 18:28 GMT
சேந்தமங்கலம் அருகே விவசாயி வீட்டில் செல்போன் திருடிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள பொட்டணம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 27). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் செல்போனுக்கு சார்ஜ் போட்டு விட்டு வெளியே சென்று இருந்தார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது செல்போன் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சீரங்கன் (39) என்பவர் சக்திவேல் வீட்டிற்குள் சென்று விட்டு வெளியே சென்றது தெரிந்தது.

இதுகுறித்து சக்திவேல் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சீரங்கன் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News