செய்திகள்
மோட்டார் சைக்கிள்களில் மதுபாட்டில்கள் கடத்திய 4 பேர் கைது
மோட்டார் சைக்கிள்களில் மதுபாட்டில்களை கடத்திய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே கோலியனூர் கூட்டுசாலையில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராணி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் 167 மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக செங்கல்பட்டை சேர்ந்த ஜெகன் (வயது 22), செய்யூரை சேர்ந்த வைரமுத்து (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் கண்டமங்கலம் ரெயில்வே கேட் வழியாக மோட்டார் சைக்கிளில் 150 மதுபாட்டில்களை கடத்தி வந்த புதுச்சேரி மூலக்குளத்தை சேர்ந்த அந்தோணிராஜ் (41), முனுசாமி (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம் அருகே கோலியனூர் கூட்டுசாலையில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராணி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் 167 மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக செங்கல்பட்டை சேர்ந்த ஜெகன் (வயது 22), செய்யூரை சேர்ந்த வைரமுத்து (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் கண்டமங்கலம் ரெயில்வே கேட் வழியாக மோட்டார் சைக்கிளில் 150 மதுபாட்டில்களை கடத்தி வந்த புதுச்சேரி மூலக்குளத்தை சேர்ந்த அந்தோணிராஜ் (41), முனுசாமி (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.