செய்திகள்
விபத்துக்குள்ளான் பஸ் - கார்.

ஊத்துக்குளியில் 2 பஸ்கள் மோதல் - பயணிகள் உயிர் தப்பினர்

Published On 2021-10-02 10:42 GMT   |   Update On 2021-10-02 10:42 GMT
விபத்தில் அரசு பேருந்தின் பக்கவாட்டு பகுதியும்,தனியார் பேருந்தின் முன் பகுதியும் சேதமடைந்தன.
ஊத்துக்குளி:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பஸ் நிறுத்தத்தில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. 

அப்போது  பின்னால் திருப்பூரில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து வந்தது. இந்தநிலையில் அரசு பேருந்தை தனியார் பேருந்து முந்தி செல்ல முயற்சிக்கும்போது பேருந்தின் பக்கவாட்டில் தனியார் பேருந்து பயங்கரமாக மோதியது. 

இதனால் அரசு பேருந்தின் பக்கவாட்டு பகுதியும், தனியார் பேருந்தின் முன் பகுதியும் சேதமடைந்தன. கண்ணாடிகள் நொறுங்கின. இந்தநிலையில் அரசு  பேருந்தின் பக்கவாட்டுப் பகுதியில் நின்று கொண்டிருந்த கார் சேதமடைந்தது.  

பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர். இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
Tags:    

Similar News