செய்திகள்
உடுமலை அருகே கோவில் உண்டியலை திருடி சென்ற கொள்ளையர்கள்
சம்பவத்தன்று அர்ச்சகர் வழக்கம்போல் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவின் 2 பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது.
உடுமலை;
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொழுமம் ரோட்டில் வெங்கடேசா லேஅவுட் குடியிருப்புப் பகுதியில் ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் அர்ச்சகர் வந்து அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்துவிட்டு செல்வார்.
சம்பவத்தன்று அர்ச்சகர் வழக்கம்போல் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவின் 2 பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியலை காணவில்லை.
மர்ம ஆசாமிகள் உண்டியலை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர். கோவில் உண்டியல் திருடப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.