செய்திகள்
கோப்புபடம்.

பழையகோட்டையில் ரூ.29 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

Published On 2021-09-27 10:50 GMT   |   Update On 2021-09-27 10:50 GMT
காங்கேயம் இன காளைகள், கன்றுகள், பசு மாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கேயம் இன காளைகள் ,கன்றுகள், சு மாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கம்போல் சந்தை நடந்தது. 

சந்தையில் திருப்பூர் ,ஈரோடு, கரூர், நாமக்கல் ,கோவை, திருச்சி ,திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள் வளர்ப்போர், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த காங்கேயம் இன பெரிய பூச்சி காளைகள் ,இளம் பூச்சி காளைகள், செவலை பசு மாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசு மாடுகள் ,மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 124 காங்கேயம் இன காளைகள் பசு மாடுகளில் மொத்தம் 70 நாட்டு பசு மாடுகள் ,காளைகள், கன்றுகள் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினையுடன் காங்கேயம் இன மயிலை பசுமாடு ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் ரூ.29 லட்சத்துக்கு காங்கேயம் இன காளைகள், கன்றுகள, மாடுகள், விற்பனை செய்யப்பட்டது. 
Tags:    

Similar News