செய்திகள்
நெல்லையில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன் (வயது 31). இவர் தினசரி மது குடித்துவிட்டு வந்து தாயார் கனகாவிடம் தகராறு செய்து வந்தார். இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கனகாவின் தங்கை எலிசபெத் ராணி, அகிலனை கண்டித்தார்.
இதில் ஆத்திரமடைந்த அகிலன், எலிசபெத் ராணியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து அவர் தாழையூத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலனை கைது செய்தனர்.
தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன் (வயது 31). இவர் தினசரி மது குடித்துவிட்டு வந்து தாயார் கனகாவிடம் தகராறு செய்து வந்தார். இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கனகாவின் தங்கை எலிசபெத் ராணி, அகிலனை கண்டித்தார்.
இதில் ஆத்திரமடைந்த அகிலன், எலிசபெத் ராணியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து அவர் தாழையூத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலனை கைது செய்தனர்.