செய்திகள்
கோப்புபடம்

உளுந்தூர்பேட்டை அருகே ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்

Published On 2021-09-24 10:05 GMT   |   Update On 2021-09-24 10:05 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை பகுதியில் பறக்கும்படை அதிகாரி பாண்டி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

உளுந்தூர்பேட்டை:

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் வருகிற அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும்படை அதிகாரிகள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை பகுதியில் பறக்கும்படை அதிகாரி பாண்டி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து காரில் இருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சல்மான் என்பதும், இவர் புதுக்கோட்டையில் இருந்து திருவண்ணாமலைக்கு பணத்தை எடுத்து செல்வதாக கூறினார். ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News