செய்திகள்
கோப்புபடம்

ஏற்றுமதியை 4 மடங்காக உயர்த்தும் நோக்கம் கொண்ட ஒரே பிரதமர் மோடி - ஏ.இ.பி.சி., தலைவர் புகழாரம்

Published On 2021-09-23 05:01 GMT   |   Update On 2021-09-23 05:01 GMT
சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய ஆர்வமாக இருந்த தொழில்கள் இப்போது இந்தியாவுக்கு மாறி வருகின்றன.
திருப்பூர்:

ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஏ.இ.பி.சி., தலைமையகத்தில் நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வர்த்தக விழா இரண்டு நாட்கள் நடந்தது. 

இதில் திருப்பூரை சேர்ந்த ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தலைமை வகித்து பேசியதாவது:

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்த வர்த்தக விழாக்களை நடத்தும் பிரதமருக்கு நன்றி. 

சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய ஆர்வமாக இருந்த தொழில்கள் இப்போது இந்தியாவுக்கு மாறி வருகின்றன. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் தொழில் துறை நன்றாக வளர்ந்து வருகிறது. 

நாட்டின் சுதந்திரத்துக்கு பின், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியை நான்கு மடங்காக உயர்த்தும் நோக்கம் கொண்ட ஒரே பிரதமர் மோடி தான். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News