செய்திகள்
விபத்து பலி

நல்லம்பள்ளி அருகே கார் மோதி முதியவர் பலி

Published On 2021-09-21 12:49 GMT   |   Update On 2021-09-21 12:49 GMT
நல்லம்பள்ளி அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே பண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 70). இவர் நேற்று விடியற்காலை பாளையம்புதூர் அருகேயுள்ள தொம்பரகாம்பட்டி தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் ஒன்று முதியவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News