செய்திகள்
ஆய்வு பணியில் ஈடுபட்ட கலெக்டர்.

மலைவாழ் குடியிருப்பு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

Published On 2021-09-20 11:54 GMT   |   Update On 2021-09-20 11:54 GMT
வனப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். அதற்கு பருவமழையும் அதன் மூலமாக ஆறுகளில் ஏற்படுகின்ற நீர்வரத்து கைகொடுத்து உதவ வேண்டும்.
உடுமலை:

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, மாவடப்பு,தளிஞ்சி,தளிஞ்சிவயல், குளிப்பட்டி, குருமலை,மேல் குருமலை,காட்டுப்பட்டி கருமுட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

வனப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். அதற்கு பருவமழையும் அதன் மூலமாக ஆறுகளில் ஏற்படுகின்ற நீர்வரத்து கைகொடுத்து உதவ வேண்டும். அப்போதுதான் விவசாயம் சாத்தியமாகும். அதிலும் பருவநிலை மாற்றம், இயற்கை இடர்பாடுகள் ,வனவிலங்குகளால் ஏற்படுகின்ற இடையூறுகள்  மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வருகிறது. 

இதனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து செய்து தருகின்றனர்.

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் வினீத், தளிஞ்சி, தளிஞ்சிவயல் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது தாழ்த்தப்பட்டேர் மற்றும் பழங்குடியினருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருதல்,ஜாதி சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அப்போது உடுமலை தாசில்தார் ராமலிங்கம் உள்ளிட்ட வருவாய் மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News