செய்திகள்
குடும்பத்துடன் கருணை கொலை செய்து விடுங்கள்-மாற்றுத்திறனாளி மனுவால் பரபரப்பு
கருணை கொலை செய்யுமாறு மகாதேவன் கொடுத்த மனுவால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாஅவரப்பாளையத்தை சேர்ந்தவர் மகாதேவன், மாற்றுத்திறனாளி. இவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 5 வருடமாக வீட்டுமனை பட்டா மற்றும் குடிசை மாற்று வாரியத்தில் மனு கொடுத்தும் எனக்கு பட்டா எதுவும் வழங்கப்படவில்லை.
எனவே நான் மற்றும் எனது மனைவி, மகன் ஆகிய 3 பேரையும் குடும்பத்துடன் கருணை கொலை செய்து விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ரேசன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்தார். கருணை கொலை செய்யுமாறு மகாதேவன் கொடுத்த மனுவால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.