செய்திகள்
விபத்து

ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி

Published On 2021-09-19 10:35 GMT   |   Update On 2021-09-19 10:35 GMT
ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே ஆலங்கோட்டையைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 57).

இவர், தெங்கம்புதூர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ராஜாக்கமங்கலத்தில் இருந்து ஆலங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ராஜாக்கமங்கலம் சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக வந்த தர்மபுரத்தைச் சேர்ந்த அஜித் (25) என்பவரது மோட்டார் சைக்கிள், குமரேசன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

படுகாயம் அடைந்த குமரேசனை தனியார் ஆஸ்பத்திரியிலும், அஜித்தை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். இதில் குமரேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் குமரேசன் மகன் அஜித் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News