செய்திகள்
கோப்புபடம்

நீடாமங்கலம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2021-09-19 09:06 GMT   |   Update On 2021-09-19 09:06 GMT
நீடாமங்கலம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே அனுமந்தபுரம் கிராமம் உள்ளது. இங்கு மாதாகோவில் தெருவில் வசித்து வந்தவர் தம்புசாமி (வயது 75). விவசாயியான இவர், குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு வீட்டில் வைத்திருந்த வயலுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார். 

இதில் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி தம்புசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News