செய்திகள்
மின்சார நிறுத்தம்

சூலூர், சரவணம்பட்டி, உக்கடம் பகுதிகளில் நாளை மின்தடை

Published On 2021-09-17 09:59 GMT   |   Update On 2021-09-17 09:59 GMT
சூலூர், சரவணம்பட்டி, உக்கடம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவை:

கோவை மாவட்டம் சூலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை(18-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சூலூர், பி.எஸ் நகர், டி.எம். நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம் பாளையம், எம்.ஜி. புதூர், ராவுத்தூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.

இதே போல சரவணம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (18-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டபாளையம், கவுண்டர்மில்ஸ், சுப்பிரமணிபாளையம், கே.ஜி.புதூர், மணியகா ரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெய பிரகாஷ்நகர், கணபதிநகர், உடையாம்பாளையம், வெள்ளகிணறு ஹவுசிங் யூனிட், விநாயகபுரம் வடபகுதி ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என வடமதுரை செயற்பொறியாளர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

உக்கடம் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி)நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வெரைட்டி ஹால் ரோடு பகுதி, டவுண்ஹால் பகுதி. தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதிகள், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர் மற்றும் டாக்டர் முனிசாமி நகர், ஸ்டேட் பாங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம் பகுதிகள், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை, உக்கடம் பகுதி ஆகிய இடங்களி6ல் மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என செயற்பொறியாளர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News