செய்திகள்
கொரோனா தடுப்பூசி.

உடுமலையில் 12 -ந்தேதி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-09-08 08:23 GMT   |   Update On 2021-09-08 08:23 GMT
தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டையுடன் வர வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 

வருகிற 12 -ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை உடுமலை தேஜஸ் மஹாலில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

இதில் சுற்றுலா தொழில் முனைவோர்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆட்டோ, சுற்றுலாவேன், சுற்றுலாபயணிகள், பஸ், டாக்ஸி ஓட்டுநர்கள் என அனைவரும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 

மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டையுடன் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News