செய்திகள்
உடுமலை தமிழக - கேரள எல்லையில் போலீசார், வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்ட காட்சி.

நிபா வைரஸ் - உடுமலை கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை

Published On 2021-09-07 07:24 GMT   |   Update On 2021-09-07 07:24 GMT
கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை:

கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் நோய் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

இதையொட்டி திருப்பூர் மாவட்டம்  உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள ஒன்பதாறு சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அமராவதி ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் நடராஜன் கூறுகையில்:

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எந்த இடத்திலும் இல்லை. ஆனாலும் தமிழக-கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

நிபா வைரஸ் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளை பொதுமக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
Tags:    

Similar News