செய்திகள்
தற்கொலை

ஏரியூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2021-09-04 12:00 GMT   |   Update On 2021-09-04 12:00 GMT
ஏரியூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியூர்:

ஏரியூர் அருகே உள்ள மாது கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 51), கூலித்தொழிலாளி. இவருக்கு பார்வதி (41) என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடும்பம் நடத்த சங்கர் போதிய வருமானம் இன்றி தவித்து வந்தார். இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் மனமுடைந்து இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று சங்கர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News