செய்திகள்
பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது-. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
மழையால் மாநகரில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்தநிலையில் இன்று மதியமும் திருப்பூர் மாநகரில் சிறிது நேரம் மழை பெய்தது.
மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் தவிப்புக்கு உள்ளாகினர். பல இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறி காட்சியளிக்கின்றன. அதனை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.