செய்திகள்
பல்லடம் அருகே மலைபோல் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்
வீடுகள் மற்றும் கம்பெனிகளில் சேகரமாகும் குப்பைகளை அருகே உள்ள திருப்பூர் மெயின் ரோட்டில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
பல்லடம்:
திருப்பூர் மெயின்ரோடு பல்லடம் அருகே அமைந்துள்ளது மகாலட்சுமி நகர். இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் தனியார் கம்பெனிகளும் இங்கு உள்ளன.
இந்தநிலையில் வீடுகள் மற்றும் கம்பெனிகளில் சேகரமாகும் குப்பைகளை அருகே உள்ள திருப்பூர் மெயின் ரோட்டில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு மலை போல் குப்பைகள் குவிந்து கிடந்தது.
இதுகுறித்து மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிமன்ற நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன் வந்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் மலைபோல் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டது. மேலும் அங்கு குப்பைகள் கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.