செய்திகள்
கைது

நெல்லையில் கஞ்சா விற்ற பெண் கைது

Published On 2021-08-28 10:56 GMT   |   Update On 2021-08-28 10:56 GMT
நெல்லையில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை பேட்டையை சேர்ந்த போலீசார் நேற்று புறநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சுத்தமல்லி விளக்கு குடிசை மாற்று வாரிய வீடுகள் அருகே ஒரு இளம்பெண் சந்தேகப்படும் படி நின்று கொண்டு இருந்தார்.

உடனடியாக போலீசார் அந்த பெண்ணை விசாரித்து சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.

அவர் சுத்தமல்லியை சேர்ந்த இசக்கியம்மாள் (வயது 22) என்று தெரியவந்தது. அவர் மேலும் கஞ்சா பதுக்கி வைத்துள்ளாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News