செய்திகள்
உயிரிழப்பு

மதுபோதையில் மண்எண்ணெய் குடித்த தொழிலாளி உயிரிழப்பு

Published On 2021-08-27 09:26 GMT   |   Update On 2021-08-27 09:26 GMT
மீஞ்சூர் அருகே மதுபோதையில் மண்எண்ணெயை குடித்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த முறிச்சம்பேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரபாபு (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.

மதுபோதையில் வீட்டுக்கு வந்த சந்திரபாபு திடீரென பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை குடித்தார்.  உடனடியாக அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரபாபு பரிதாபமாக இறந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News