செய்திகள்
ஸ்ரீவைகுண்டம் அருகே வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே நள்ளிரவில் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லகுளம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வேம்பு அம்மாள் (வயது 60).
பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகன் கேரளாவில் வசித்து வருகிறார். இதனால் வேம்பு அம்மாள் மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று இரவு அவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு திடீரென்று அவரது வீட்டின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இதில் அவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சேரகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பேத்கர் நகரில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் அரசு சார்பில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அந்த வீடுகளில் சீரமைப்பு பணி எதுவும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே இந்த வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலியானதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர். இதே போல் சேதமடைந்த வீடுகளை விரைவில் சீரமைத்து தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லகுளம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வேம்பு அம்மாள் (வயது 60).
பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகன் கேரளாவில் வசித்து வருகிறார். இதனால் வேம்பு அம்மாள் மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று இரவு அவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு திடீரென்று அவரது வீட்டின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இதில் அவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சேரகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பேத்கர் நகரில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் அரசு சார்பில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அந்த வீடுகளில் சீரமைப்பு பணி எதுவும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே இந்த வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலியானதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர். இதே போல் சேதமடைந்த வீடுகளை விரைவில் சீரமைத்து தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.