செய்திகள்
நீரில் மூழ்கி பலி

நாட்டறம்பள்ளி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

Published On 2021-08-24 14:44 GMT   |   Update On 2021-08-24 14:44 GMT
நாட்டறம்பள்ளி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளி:

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட அதிபெரமனூர் லட்சுணநாயுடு தெருவைச் சேர்ந்தவர் முனிசாமி, பீடி தொழிலாளி. இவருடைய மகன் சபரிநாதன் (வயது 15). இவர், தனது நண்பர்களுடன் மல்லகுண்டா கோயன்கொள்ளை என்ற இடத்தில் உள்ள ஒரு குட்டையில் குளிக்க சென்றார்.

குட்டையில் குளித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீரில் மூழ்கி விட்டார். நண்பர்கள் கூச்சலிட்டு அப்பகுதியில் இருந்த மக்களை அழைத்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரின் உடலை காணவில்லை.

நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து குட்டையில் மூழ்கிய சிறுவன் சபரிநாதனை பிணமாக மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News